Monday, October 20, 2008
நதி
உன் நிழல் பட்டு வெட்கமடைந்தேன்;
உன் கரம் பட்டு மெய் சிலிர்த்தேன்;
நீ அள்ளி கொள்ள நகர்ந்து செல்கின்றேன்...
Thursday, August 28, 2008
ஏனோ?
சிரிப்பிலே சில்லறையாய் சிதறிபோய்
பார்வையிலே பனியாய் உறைந்துபோய்
பேசுகையிலே மீண்டும் ஒருமுறை - உயிர்பெற்றேன்!
பேச்சுவழக்கில் நான் சொன்ன சிறு சிறு பொய்களில்
பிடிக்கும் என நீ சொன்ன சிறு சிறு பொய்களை
உண்மையாக மாற்றுவதற்கு சிலமுறை - முயற்சிக்கிறேன்!
கவிதை நன்றாக இருக்கிறது என்றாய்
அவள் கொடுத்து வைத்தவள் என்றாய்
அது நீ தான் என சொல்லத்தெரியாமல் பலமுறை - விழித்துநின்றேன்!
Wednesday, August 13, 2008
Monday, August 11, 2008
My Captions
1) Your efforts are not vaild untill you produce Results.
2) Everybody will have their own version of justification for all the mistakes they commit in their Life.
2) Everybody will have their own version of justification for all the mistakes they commit in their Life.
நான்
நான்
கவிதையாக பிறந்திருந்தால்,
நல்ல கவிஞன் நாவில் வலம்வரும் நல்படைப்பாக இருந்திருப்பேன்...
பனித்துளியாக பிறந்திருந்தால்,
புற்களின் மேலே தவழ்ந்தோடும் சுகத்தில் இலயித்து இருந்திருப்பேன்...
மழலையாக பிறந்திருந்தால்,
குழந்தையின் நாவில் தவழ்ந்து விளையாடி இருந்திருப்பேன்...
நீராக பிறந்திருந்தால்,
பாழ்நிலம்,வளர்நிலம் பாராமல் மும்மாரி பொழிந்திருப்பேன்...
மலராக பிறந்திருந்தால்,
ரீங்காரமிடும் வண்டுகளை என்னைநோக்கி ஈர்த்திருந்திருப்பேன்...
உப்பாக பிறந்திருந்தால்,
உணவு பண்டங்களின் சுவையை கூட்டும் சேவை புரிந்திருப்பேன்...
இசையாக பிறந்திருந்தால்,
ஜீவராசிகளின் கவலைகளை மறந்து மெய்மறக்க செய்திருப்பேன்...
நான்
மனிதனாக பிறந்ததனால்
இவை அனைத்தையும் - அனுபவித்து கொண்டிருக்கிறேன்!
Saturday, August 9, 2008
திரும்பி வருவாள் என்று...
மாலை மயக்கத்தை நோக்கி செல்லும்
மனது!
அம்மனதை கொண்டு
காற்றிலே கவிதை இயற்றி
மழையிலே கவிதையை திருத்தி
இடியிலே கவிதையை முழங்கி
மின்னல் ஒளியிலே கவிதையை படித்து காட்டினேன்.
அதை கேட்டு -
புயல் காற்றாய் கலைந்து போனவளை நோக்கி
பனி தூறலாய் இரு கண்ணீர் துளிகள் சிந்தி!
திரும்பி நடந்தேன்
திரும்பி வருவாள் என்று...
சோர்ந்து போனேன்
Subscribe to:
Posts (Atom)